ஹதீஸ்கள்
#5610
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (‘மிஅராஜ்’ எனும் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு நான்கு நதிகள் (ஓடிக்கொண்டு) இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் (ஓடிக்கொண்டு) இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் இரண்டு நதிகள் சொர்க்கத்தி லுள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரு நதிகளாகும். அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன. பால் கிண்ணம், தேன்கிண்ணம், மதுக்கிண்ணம் ஆகியவைதான் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம், ‘‘நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்” என்று சொல்லப்பட்டது. இதை அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.32 இதே ஹதீஸ் மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் (சொர்க்கத்து) நதிகள் குறித்து மேற்கண்டபடி அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால்,) மூன்று கிண்ணங்கள் பற்றி குறிப்பிடவில்லை. அத்தியாயம் :
وقال ابراهيم بن طهمان عن شعبة، عن قتادة، عن انس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم " رفعت الى السدرة فاذا اربعة انهار، نهران ظاهران، ونهران باطنان، فاما الظاهران النيل والفرات، واما الباطنان فنهران في الجنة فاتيت بثلاثة اقداح، قدح فيه لبن، وقدح فيه عسل، وقدح فيه خمر، فاخذت الذي فيه اللبن فشربت فقيل لي اصبت الفطرة انت وامتك ". قال هشام وسعيد وهمام عن قتادة عن انس بن مالك عن مالك بن صعصعة عن النبي صلى الله عليه وسلم في الانهار نحوه، ولم يذكروا ثلاثة اقداح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5610
- Book Index
- 36
Grades
- -
