ஹதீஸ்கள்
#5607
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு மக்காவிலிருந்து (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து) வந்தார்கள். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை) அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடன் இருந்தபோது நாங்கள் ஓர் ஆட்டிடையனைக் கடந்துசென்றோம். அபபோது நான் (ஆட்டிலிருந்து) ஒரு கிண்ணத்தில் சிறிது பால் கறந்(து நபியவர்களுக்குக் கொடுத்)தேன். நான் திருப்தியடையும்வரை அதை நபி (ஸல்) அவர்கள் பருகினார்கள். (எங்களைப் பிடிக்க) சுராக்கா பின் ஜுஉஷும் ஒரு குதிரையில் எங்களை நோக்கி வந்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது சுராக்கா தமக்கெதிராகப் பிரார்த்திக்க வேண்டாமென்றும், தாம் திரும்பச் சென்றுவிடுவதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக்கொண்டார். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார் கள்.29 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5607
- Book Index
- 33
Grades
- -