ஹதீஸ்கள்
#5605
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் ‘அந்நகீஉ’ (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا جرير، عن الاعمش، عن ابي صالح، وابي، سفيان عن جابر بن عبدالله، قال جاء ابو حميد بقدح من لبن من النقيع، فقال له رسول الله صلى الله عليه وسلم " الا خمرته ولو ان تعرض عليه عودا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5605
- Book Index
- 31
Grades
- -
