ஹதீஸ்கள்
#5600
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூதல்ஹா, அபூதுஜானா, சுஹைல் பின் பய்ளா (ரலி) ஆகியோருக்கு நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்கள் மற்றும் (கனிந்த) பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றின் கலப்பு ஊறலை ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது மது தடை செய்யப்பட்டது. உடனே நான் அதை எறிந்துவிட்டேன். நான் அவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பவனாகவும் அவர்களில் வயதில் சிறியவனாகவும் இருந்தேன். நாங்கள் அந்தக் கலவையை அன்று மதுவாகவே கருதினோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسلم، حدثنا هشام، حدثنا قتادة، عن انس رضى الله عنه قال اني لاسقي ابا طلحة وابا دجانة وسهيل ابن البيضاء خليط بسر وتمر اذ حرمت الخمر، فقذفتها وانا ساقيهم واصغرهم، وانا نعدها يوميذ الخمر. وقال عمرو بن الحارث حدثنا قتادة سمع انسا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5600
- Book Index
- 26
Grades
- -
