ஹதீஸ்கள்
#5595
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம், ‘‘எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பது விரும்பத் தகாதது என இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீங்கள் வினவியதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (வினவினேன்). இறைநம்பிக்கையாளர் களின் அன்னையே! எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரான எங்களை சுரைக்காய் குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ‘‘சுட்ட களிமண் பாத்திரத்தையும் மண்சாடியையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லையா?” என நான் கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள், ‘‘நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காத ஒன்றை உங்களுக்கு அறிவிக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :
حدثني عثمان، حدثنا جرير، عن منصور، عن ابراهيم، قلت للاسود هل سالت عايشة ام المومنين عما يكره ان ينتبذ فيه فقال نعم قلت يا ام المومنين عما نهى النبي صلى الله عليه وسلم ان ينتبذ فيه قالت نهانا في ذلك اهل البيت ان ننتبذ في الدباء والمزفت. قلت اما ذكرت الجر والحنتم قال انما احدثك ما سمعت، افاحدث ما لم اسمع
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5595
- Book Index
- 21
Grades
- -
