ஹதீஸ்கள்
#5588
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள்: மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம்பழம், கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, தேன் ஆகியவையே அந்தப் பொருட்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக்கூடியதாகும்.12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவான தொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு: 1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவருடைய பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?13 2. ‘கலாலா’ என்றால் என்ன?14 3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்.15 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹய்யான் அத்-தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஆமிர் பின் ‘அபீ (ரஹ்) அவர்களிடம், ‘‘அபூஅம்ரே! சிந்து சமவெளியில் அரிசியால் தயாரிக்கப்படும் ஒரு வகை (மது)பானம் உள்ளதே? (அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அது ‘நபி (ஸல்) அவர்களது காலத்தில்’ அல்லது உமர் (ரலி) அவர்களது காலத்தில்’ இருந்ததில்லை” என்று பதிலளித்தார்கள். மற்றோர் அறிவிப்பில் (ஐந்து வகைப் பொருட்களில் முதலாவதாக) ‘திராட்சை’ என்பதற்குப் பதிலாக ‘உலர்ந்த திராட்சை’ என்று வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا احمد بن ابي رجاء، حدثنا يحيى، عن ابي حيان التيمي، عن الشعبي، عن ابن عمر رضى الله عنهما قال خطب عمر على منبر رسول الله صلى الله عليه وسلم فقال انه قد نزل تحريم الخمر، وهى من خمسة اشياء العنب والتمر والحنطة والشعير والعسل، والخمر ما خامر العقل، وثلاث وددت ان رسول الله صلى الله عليه وسلم لم يفارقنا حتى يعهد الينا عهدا الجد والكلالة وابواب من ابواب الربا. قال قلت يا ابا عمرو فشىء يصنع بالسند من الرز. قال ذاك لم يكن على عهد النبي صلى الله عليه وسلم او قال على عهد عمر. وقال حجاج عن حماد عن ابي حيان مكان العنب الزبيب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5588
- Book Index
- 14
Grades
- -
