ஹதீஸ்கள்
#5583
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரி டையே நின்று என் தந்தையின் சகோதரர் களுக்கு நிறம் மாறிய பேரீச்சங்காய்களால் ஆன மதுவை ஊற்றிக்கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனா யிருந்தேன். அப்போது ‘‘மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று சொல்லப் பட்டது. உடனே (என் உறவினர்கள்) ‘‘அதைக் கவிழ்த்து (கொட்டி)விடு” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் கவிழ்த்து(க் கொட்டி)விட்டேன். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் தர்கான் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘‘அவர்களுடைய மது எத்தகையது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பேரீச்ச செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்” என்று சொன்னார்கள். அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், ‘‘(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது” என்று சொன்னார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லை. என் தோழர்களில் ஒருவர் கூறுகிறார்: அனஸ் (ரலி) அவர்கள், ‘‘அதுதான் அவர் களின் அன்றைய மதுபானமாக இருந்தது” என்று சொல்ல நான் கேட்டிருக் கிறேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5583
- Book Index
- 9
Grades
- -