ஹதீஸ்கள்
#5578
ஸஹீஹ் அல்-புகாரீ - Drinks
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகின்றவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றின் (அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல் மலிக் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து (தம் தந்தை) அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் தமக்கு அறிவித்துவந்ததாகக் கூறினார்கள். மேலும், அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள், ‘‘(என் தந்தை) அபூபக்ர் (ரஹ்) அவர்கள் இந்த (ஹதீஸில் இடம்பெற்றுள்ள மூன்று) விஷயங்களுடன் (நான்காவதாக), ‘‘(மக்களின்) மதிப்புமிக்க செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்” என்பதையும் (நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக) சேர்த்து அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.5 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Drinks
- Hadith Index
- #5578
- Book Index
- 4
Grades
- -