ஹதீஸ்கள்
#5573
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
அபூஉபைத் (ரஹ்) அவர்கள் (தொடர்ந்து) கூறியதாவது: பிறகு நான் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் உரை (குத்பா) நிகழ்த்தும் முன்பே தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்கு மேலாக உங்கள் குர்பானி இறைச்சிகளை நீங்கள் உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று சொன்னார்கள்.28 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
قال ابو عبيد ثم شهدته مع علي بن ابي طالب، فصلى قبل الخطبة، ثم خطب الناس فقال ان رسول الله صلى الله عليه وسلم نهاكم ان تاكلوا لحوم نسككم فوق ثلاث. وعن معمر عن الزهري عن ابي عبيد نحوه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5573
- Book Index
- 29
Grades
- -
