ஹதீஸ்கள்
#5570
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் ‘‘மூன்று நாட்களுக்குமேல் (குர்பானி இறைச்சியை) உண்ணாதீர்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது அதை உண்ணக் கூடாது எனக் கட்டாயப்படுத்து வதற்கல்ல; மாறாக, அவர்கள் (அவ்வாண்டு பஞ்சத்தில் பீடிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு வசதியுள்ளவர்கள்), அதிலிருந்து உணவளிக்க வேண்டுமென்று விரும்பி னார்கள். (அவர்களின் எண்ணத்தை) அல்லாஹ்வே மிக அறிந்தவன்.27 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5570
- Book Index
- 26
Grades
- -