ஹதீஸ்கள்
#5568
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு பயணத்தில் இருந்ததால் அப்போது நான்) ஊரில் இருக்கவில்லை. பிறகு (பயணத்திலிருந்து திரும்பி) வந்தேன். (சாப்பிடும்போது) என் முன்னே இறைச்சி வைக்கப்பட்டது. அதை வைத்தவர், ‘‘இது எங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சி” என்று சொன்னார். நான், ‘‘இதை எடுத்துவிடுங்கள். நான் இதை உண்ணமாட்டேன்” என்று சொன்னேன். பிறகு எழுந்து புறப்பட்டு என் சகோதரர் அபூகத்தாதா (ரலி)அவர்களிடம் சென்றேன். -அபூகத்தாதா (ரலி) அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரராகவும் பத்ர் போரில் கலந்துகொண்டவராகவும் இருந்தார்கள்.- நான் நடந்ததை அவர்களிடம் கூற, அவர்கள் ‘‘நீங்கள் பயணம் சென்றபின் மறுஉத்தரவு பிறந்தது” என்று சொன்னார் கள்.26 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني سليمان، عن يحيى بن سعيد، عن القاسم، ان ابن خباب، اخبره انه، سمع ابا سعيد، يحدث انه كان غايبا، فقدم فقدم اليه لحم. قال وهذا من لحم ضحايانا. فقال اخروه لا اذوقه. قال ثم قمت فخرجت حتى اتي اخي قتادة وكان اخاه لامه، وكان بدريا فذكرت ذلك له فقال انه قد حدث بعدك امر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5568
- Book Index
- 24
Grades
- -
