ஹதீஸ்கள்
#5563
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (ஈதுல் அள்ஹா பெரு)நாளன்று தொழுதுவிட்டு, ‘‘நமது தொழுகையைத் தொழுது (அதில்) நம்முடைய (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கியவர் எவரும் (தொழுகை முடிந்து) திரும்பும் வரை (குர்பானி பிராணியை) அறுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். உடனே அபூபுர்தா (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் (தொழுகைக்கு முன்பே அறுத்து) அதைச் செய்துவிட்டேனே?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘அது நீங்கள் அவசரப்பட்டு (அறுத்து)விட்ட பொருளாகும்” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், ‘‘என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான இரு ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. நான் அதை அறுக்கலாமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘சரி (நீங்கள் அறுக்கலாம்). பிறகு உங்களைத் தவிர வேறெவருக்கும் அது செல்லாது” என்று சொன்னார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘அதுவே (அவர் தொழுகைக்கு முன்பும், தொழுகைக்குப் பின்பும் கொடுத்த) அவருடைய இரு குர்பானிகளில் சிறந்ததாகும்” எனக் கூறுகிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5563
- Book Index
- 19
Grades
- -