ஹதீஸ்கள்
#5561
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.: (ஈதுல் அள்ஹா பெருநாளன்று) நபி (ஸல்) அவர்கள், ‘‘(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘இது, இறைச்சி விரும்பி உண்ணப் படும் நாள்” என்று சொல்லிவிட்டு, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டாரின் தேவை பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். நபி (ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றுக்கொண்டதைப்போல் இருந்தது. அந்த மனிதர், ‘‘என்னிடம் இரண்டு (இறைச்சி) ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்க, நபி (ஸல்) அவர்களும் அவருக்கு அனுமதி யளித்தார்கள். அந்த அனுமதி மற்றவர்களுக்கும் பொருந்துமா; அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது. பிறகு நபி (ஸல்) அவர்கள் இரு செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று அவற்றை அறுத்தார்கள். பிறகு மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்தைக்குச் சென்று அவற்றை அறுத்தார்கள்.18 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا اسماعيل بن ابراهيم، عن ايوب، عن محمد، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " من ذبح قبل الصلاة فليعد ". فقال رجل هذا يوم يشتهى فيه اللحم وذكر من جيرانه فكان النبي صلى الله عليه وسلم عذره وعندي جذعة خير من شاتين فرخص له النبي صلى الله عليه وسلم فلا ادري بلغت الرخصة ام لا، ثم انكفا الى كبشين يعني فذبحهما ثم انكفا الناس الى غنيمة فذبحوها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5561
- Book Index
- 17
Grades
- -
