ஹதீஸ்கள்
#5560
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) ‘‘நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச்சென்று குர்பானி பிராணிகளை அறுப்பதாகவே இருக்க வேண்டும். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கிறாரோ அவர் தமது குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாடு எதிலும் சேராது” என்று சொன்னார்கள். அப்போது அபூபுர்தா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுவ தற்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயதுக்குட்பட்ட (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘முதலில் அறுத்ததற்குப் பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் ‘அது செல்லாது’ அல்லது ‘நிறைவேறாது’ என்று பதிலளித்தார்கள்.17 அத்தியாயம் :
حدثنا حجاج بن المنهال، حدثنا شعبة، قال اخبرني زبيد، قال سمعت الشعبي، عن البراء رضى الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يخطب فقال " ان اول ما نبدا من يومنا هذا ان نصلي، ثم نرجع فننحر، فمن فعل هذا فقد اصاب سنتنا، ومن نحر فانما هو لحم يقدمه لاهله، ليس من النسك في شىء ". فقال ابو بردة يا رسول الله ذبحت قبل ان اصلي، وعندي جذعة خير من مسنة. فقال " اجعلها مكانها، ولن تجزي او توفي عن احد بعدك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5560
- Book Index
- 16
Grades
- -
