ஹதீஸ்கள்
#5548
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக் குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும்முன் ‘சரிஃப்’ எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘இ(ந்த மாத விடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. இறை இல்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர” என்று சொன்னார்கள். நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டுவரப் பட்டது. நான், ‘‘இது என்ன?” என்று கேட்டேன். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.7 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا سفيان، عن عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عايشة رضى الله عنها ان النبي صلى الله عليه وسلم دخل عليها وحاضت بسرف، قبل ان تدخل مكة وهى تبكي فقال " ما لك انفست ". قالت نعم. قال " ان هذا امر كتبه الله على بنات ادم، فاقضي ما يقضي الحاج غير ان لا تطوفي بالبيت ". فلما كنا بمنى اتيت بلحم بقر، فقلت ما هذا قالوا ضحى رسول الله صلى الله عليه وسلم عن ازواجه بالبقر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5548
- Book Index
- 4
Grades
- -
