ஹதீஸ்கள்
#5545
ஸஹீஹ் அல்-புகாரீ - Al-Adha Festival Sacrifice
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானி பிராணிகளை அறுப்போம். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் (குர்பானி பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண)இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொôன்னார்கள். உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்துவிட்டிருந்த) அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) என்னிடம் (ஆறு மாதம் முதல்) ஒரு வயதுக்குட்பட்ட (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது” என்று சொன்னார்கள்.3 மற்றோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் யார் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு நிறைவாகிவிடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று சொன்னார்கள். இதையும் பராஉ (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள்.4 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن زبيد الايامي، عن الشعبي، عن البراء رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " ان اول ما نبدا به في يومنا هذا ان نصلي ثم نرجع فننحر، من فعله فقد اصاب سنتنا، ومن ذبح قبل فانما هو لحم قدمه لاهله، ليس من النسك في شىء ". فقام ابو بردة بن نيار وقد ذبح فقال ان عندي جذعة. فقال " اذبحها ولن تجزي عن احد بعدك ". قال مطرف عن عامر عن البراء قال النبي صلى الله عليه وسلم " من ذبح بعد الصلاة تم نسكه، واصاب سنة المسلمين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Al-Adha Festival Sacrifice
- Hadith Index
- #5545
- Book Index
- 1
Grades
- -
