ஹதீஸ்கள்
#5544
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒட்டகக் கூட்டத்திலிருந்து ஓர் ஒட்டகம் வெருண்டோடியது. அப்போது ஒரு மனிதர் அம்புகளை அதன் மீது எய்து அதைத் தடுத்து நிறுத்தினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘‘வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இவற்றிலும் கட்டுக்கடங்காதவை உள்ளன. ஆகவே, இவற்றில் எது உங்களை மீறிச்செல்கிறதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறப்போர்களிலும் பயணங்களிலும் இருப்போம். அப்போது நாங்கள் பிராணிகளை அறுக்க விரும்புவோம். (எங்களிடம்) கத்தி இருக்காது. (அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தச்செய்யும் எதுவாயினும் அதைக் கொண்டு விரைவாக அறுத்திடுங்கள். (அதன் மீது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும்பட்சத்தில் (அதைச்) சாப்பிடுங்கள்; பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. ஏனெனில், பல் எலும்பாகும்; நகம் அபிசீனியர்களின் கத்தியாகும்” என்று பதிலளித்தார்கள்.57 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5544
- Book Index
- 69
Grades
- -