ஹதீஸ்கள்
#5538
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) எலி ஒன்று நெய்யில் விழுந்து இறந்துவிட்டது. (அந்த நெய்யை உண்ணலாமா? என்று) அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(உடனே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு, அ(தில் மீதியுள்ள)தை உண்ணுங்கள்” என்று பதிலளித்தார்கள்.54 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக் கிறார்கள். ஸுஹ்ரீயிடமிருந்து நான் இந்த ஹதீஸைப் பலமுறை செவியுற் றுள்ளேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5538
- Book Index
- 63
Grades
- -