ஹதீஸ்கள்
#5537
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னாரின் துணைவி யாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது பொரிக்கப்பட்ட உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை அந்த உடும்பை நோக்கி நீட்ட (அங்கிருந்த) பெண்களில் ஒருவர், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதைச் சாப்பிடப்போகிறார்கள் என்பதை அவர்களுக்கு (முன்பே) தெரிவித்துவிடுங்கள்” என்று சொன்னார். அப்போது, ‘‘இது உடும்பு, அல்லாஹ்வின் தூதரே!” என்று (அங்கிருந்தவர்கள்) கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை (உடும்பைவிட்டு) எடுத்துவிட்டார்கள். அப்போது நான், ‘‘உடும்பு தடை செய்யப்பட்டதா, அல்லாஹ்வின் தூதரே?!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை (தடை செய்யப்பட்டதன்று). ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆதலால், என் மனம் அதை விரும்பவில்லை” என்று பதிலளித்தார்கள். நான் அதை (என் பக்கம்) இழுத்து வைத்துச் சாப்பிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப்) பார்த்துக்கொண்டிருந்தார்கள்.52 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابن شهاب، عن ابي امامة بن سهل، عن عبد الله بن عباس رضى الله عنهما عن خالد بن الوليد، انه دخل مع رسول الله صلى الله عليه وسلم بيت ميمونة فاتي بضب محنوذ، فاهوى اليه رسول الله صلى الله عليه وسلم بيده فقال بعض النسوة اخبروا رسول الله صلى الله عليه وسلم بما يريد ان ياكل. فقالوا هو ضب يا رسول الله. فرفع يده، فقلت احرام هو يا رسول الله فقال " لا، ولكن لم يكن بارض قومي فاجدني اعافه ". قال خالد فاجتررته فاكلته ورسول الله صلى الله عليه وسلم ينظر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5537
- Book Index
- 62
Grades
- -
