ஹதீஸ்கள்
#5529
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளை உண்ணக் கூடாதெனத் தடை செய்திருப்பதாக (மக்கள்) கருதுகிறார்களே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஹ(க்)கம் பின் அம்ர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் பஸ்ராவில் வைத்து எம்மிடம் இதைச் சொல்லிவந்தார்கள். ஆனால், (கல்விக்) கடலான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதை மறுத்து, ‘‘(நபியே! இவர்களிடம்) கூறுவீராக: எனக்கு அருளப்பெற்ற வேத அறிவிப்பில் (வஹீயில்), உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் காணவில்லை; செத்த பிராணியையும் சிந்தப்பட்ட இரத்தத்தையும் பன்றி இறைச் சியையும் தவிர. நிச்சயம் இவை அசுத்தமாகும்” எனும் (6:145ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5529
- Book Index
- 54
Grades
- -