ஹதீஸ்கள்
#5514
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் (என் தந்தையின் சகோதரர்) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களிடம் வந்தார்கள். அங்கு யஹ்யாவின் மக்களில் ஒரு சிறுவர் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்துகொண்டிருந்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்தக் கோழியை நோக்கிச் சென்று அதை அவிழ்த்துவிட்டார்கள். பிறகு அந்தக் கோழியையும் அந்தச் சிறுவரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு (யஹ்யா பின் சயீத் அவர்களிடம்) சென்று, ‘‘இந்தப் பறவையை அம்பெய்து கொல்வதற்காகக் கட்டிவைக்க வேண்டாமென்று உங்கள் சிறுவரைக் கண்டித்துவையுங்கள். ஏனெனில், ஒரு விலங்கையோ (பறவை போன்ற) வேறெதையுமோ கொல்வதற்காகக் கட்டிவைக்க வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5514
- Book Index
- 40
Grades
- -