ஹதீஸ்கள்
#5509
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (துல்ஹுலைஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது) ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நம்மிடம் உள்ள கத்திகளால் ஒட்டகங்களை இன்று அறுத்துவிட்டால், அவற்றின் முனை மழுங்கி) நம்மிடம் கத்திகளே இல்லாத நிலையில் நாளை நாம் எதிரியைச் சந்திக்க நேருமே!” என்று சொன்னேன். அப்போது அவர்கள், ‘‘ ‘விரைவாக’ அல்லது ‘தாமதமின்றி’ (எதைக் கொண்டாவது அறுத்திடுங்கள்). இரத்தத்தை சிந்தச்செய்யும் (ஆயுதம்) எதுவாயினும் அதைக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம்; பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர! அவற்றைக் குறித்து உங்களுக்கு இதோ கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும்” என்று சொன்னார்கள். (அப்போது) நாங்கள் போர்ச் செல்வமாக ஒட்டகத்தையும் ஆட்டையும் பெற்றோம். அவற்றிலிருந்து ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதன் மீது ஒருவர் ஓர் அம்பை எய்து அதை (ஓடவிடாமல்) தடுத்து (நிறுத்தி)விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை சில இருப்பதைப் போன்றே, இந்த ஒட்டகங்களிலும் கட்டுக்கடங்காதவை உண்டு. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.34 அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا يحيى، حدثنا سفيان، حدثنا ابي، عن عباية بن رفاعة بن رافع بن خديج، عن رافع بن خديج، قال قلت يا رسول الله انا لاقو العدو غدا، وليست معنا مدى فقال " اعجل او ارن ما انهر الدم وذكر اسم الله فكل، ليس السن والظفر، وساحدثك، اما السن فعظم، واما الظفر فمدى الحبشة ". واصبنا نهب ابل وغنم فند منها بعير، فرماه رجل بسهم فحبسه فقال رسول الله صلى الله عليه وسلم " ان لهذه الابل اوابد كاوابد الوحش، فاذا غلبكم منها شىء، فافعلوا به هكذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5509
- Book Index
- 35
Grades
- -
