ஹதீஸ்கள்
#5501
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
அப்துர் ரஹ்மான் பின் கஅப் பின் மாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: எங்கள் பணிப்பெண் ஒருவர் ‘சல்உ’ எனுமிடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது தம் ஆடுகளில் ஒன்று சாகும் நிலையில் இருப்பதைப் பார்த்தார். உடனே ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்துவிட்டார். (விவரம் அறிந்த) நான் என் வீட்டாரிடம், ‘‘நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி நான் கேட்கும்வரை’ அல்லது ‘நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி இது குறித்துக் கேட்கும்வரை’ (இதைச்) சாப்பிடாதீர்கள்” என்று சொன்னேன். பிறகு ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்’ அல்லது ‘அவர்களிடம் ஆளனுப்பி வைத்தேன்’. அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிடுமாறு உத்தரவிட்டார்கள்.25 அத்தியாயம் :
حدثنا محمد بن ابي بكر، حدثنا معتمر، عن عبيد الله، عن نافع، سمع ابن كعب بن مالك، يخبر ابن عمر ان اباه، اخبره ان جارية لهم كانت ترعى غنما بسلع، فابصرت بشاة من غنمها موتا، فكسرت حجرا فذبحتها، فقال لاهله لا تاكلوا حتى اتي النبي صلى الله عليه وسلم فاساله، او حتى ارسل اليه من يساله. فاتى النبي صلى الله عليه وسلم او بعث اليه فامر النبي صلى الله عليه وسلم باكلها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5501
- Book Index
- 27
Grades
- -
