ஹதீஸ்கள்
#5500
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
ஜுன்தப் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு (ஹஜ்ஜுப் பெரு)நாளின்போது (தொழுகை முடிந்தபிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குர்பானி பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய குர்பானி பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்துவிட்டனர். (தொழுகையிலிருந்து) திரும்பிய நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் ‘குர்பானி’ கொடுத்துவிட்டிருப்பதைக் கண்டபோது, ‘‘யார் தொழுகைக்குமுன் அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் சொல் அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.23 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا ابو عوانة، عن الاسود بن قيس، عن جندب بن سفيان البجلي، قال ضحينا مع رسول الله صلى الله عليه وسلم اضحية ذات يوم فاذا اناس قد ذبحوا ضحاياهم قبل الصلاة فلما انصرف راهم النبي صلى الله عليه وسلم انهم قد ذبحوا قبل الصلاة فقال " من ذبح قبل الصلاة فليذبح مكانها اخرى، ومن كان لم يذبح حتى صلينا فليذبح على اسم الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5500
- Book Index
- 26
Grades
- -
