ஹதீஸ்கள்
#5497
ஸஹீஹ் அல்-புகாரீ - Hunting, Slaughtering
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபரை வெற்றிகொண்ட அன்று மாலையில் மக்கள் நெருப்பு மூட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இந்த நெருப்பை எதற்காக மூட்டினீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘நாட்டுக் கழுதைகளின் இறைச்சிகளை சமைப்பதற் காக” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த அடுப்புகளில் இருப்ப வற்றைக் கொட்டிவிட்டு, அவற்றின் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது மக்களிடையே இருந்த ஒருவர் எழுந்து, ‘‘பாத்திரங்களில் இருப்பவற்றைக் கொட்டிவிட்டு அவற்றை நாங்கள் கழுவி(ப் பயன்படுத்தி)க் கொள்ளலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، قال حدثني يزيد بن ابي عبيد، عن سلمة بن الاكوع، قال لما امسوا يوم فتحوا خيبر اوقدوا النيران، قال النبي صلى الله عليه وسلم " على ما اوقدتم هذه النيران ". قالوا لحوم الحمر الانسية. قال " اهريقوا ما فيها، واكسروا قدورها ". فقام رجل من القوم فقال نهريق ما فيها ونغسلها. فقال النبي صلى الله عليه وسلم " او ذاك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Hunting, Slaughtering
- Hadith Index
- #5497
- Book Index
- 23
Grades
- -
