ஹதீஸ்கள்
#5462
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்திலிருந்த ஆட்டுச் சப்பையை(க் கத்தியால்) துண்டு போ(ட்டுச் சாப்பி)டுவதை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே அவர்கள் அதையும் அதைத் துண்டிக்கப் பயன்படுத்திய கத்தியையும் (அப்படியே) போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை.77 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري،. وقال الليث حدثني يونس، عن ابن شهاب، قال اخبرني جعفر بن عمرو بن امية، ان اباه، عمرو بن امية اخبره انه، راى رسول الله صلى الله عليه وسلم يحتز من كتف شاة في يده، فدعي الى الصلاة فالقاها والسكين التي كان يحتز بها، ثم قام فصلى، ولم يتوضا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5462
- Book Index
- 91
Grades
- -
