ஹதீஸ்கள்
#5455
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
சுவைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் உணவு கொண்டுவரச் சொன்னார்கள். மாவு மட்டும்தான் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. நாங்கள் அவர்களுடன் அதை மென்று உண்டோம். பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாய் கொப்புளித்தார்கள். நாங்களும் அவர்களுடன் வாய் கொப்புளித்தோம். பிறகு, எங்களுடன் அவர்கள் மஃக்ரிப் தொழுகை தொழுதார்கள். ஆனால், (புதிதாக) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை. யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஸஹ்பா’ எனும் அந்த இடம் கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவில் உள்ளது.73 அத்தியாயம் :
قال يحيى سمعت بشيرا، يقول حدثنا سويد، خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى خيبر، فلما كنا بالصهباء قال يحيى وهى من خيبر على روحة دعا بطعام فما اتي الا بسويق، فلكناه فاكلنا معه، ثم دعا بماء فمضمض ومضمضنا معه، ثم صلى بنا المغرب ولم يتوضا. وقال سفيان كانك تسمعه من يحيى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5455
- Book Index
- 84
Grades
- -
