ஹதீஸ்கள்
#5444
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது பேரீச்சமரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மரங்களில் ஒன்று உண்டு. அதன் வளம் முஸ்லிமுக்குள்ள வளத்தைப் போன்றதாகும்” என்று சொன்னார்கள். உடனே நான், ‘‘அவர்கள் பேரீச்சமரத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள்” என்று நினைத்தேன். ஆகவே, நான் ‘‘அது பேரீச்சம் மரம்தான், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூற விரும்பினேன். பிறகு (என்னுடனிருப்பவர்களைத்) திரும்பிப் பார்த்தேன். (அங்கிருந்த) பத்துப் பேரில் நான் பத்தாமவனாக, அவர்கள் அனைவரிலும் இளம் வயதுடையவனாக இருந்தேன். ஆகவே, மௌனமாகி விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர் களே, ‘‘அது பேரீச்சமரம்தான்” என்று சொன்னார்கள்.63 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، حدثنا الاعمش، قال حدثني مجاهد، عن عبد الله بن عمر رضى الله عنهما قال بينا نحن عند النبي صلى الله عليه وسلم جلوس اذ اتي بجمار نخلة فقال النبي صلى الله عليه وسلم " ان من الشجر لما بركته كبركة المسلم ". فظننت انه يعني النخلة، فاردت ان اقول هي النخلة يا رسول الله. ثم التفت فاذا انا عاشر عشرة انا احدثهم فسكت، فقال النبي صلى الله عليه وسلم " هي النخلة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5444
- Book Index
- 73
Grades
- -
