ஹதீஸ்கள்
#5439
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தையற்காரர் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தாம் தயாரித்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அந்த உணவை உண்ணச் சென்றேன். அந்தத் தையற்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகே தொலிநீக்கப்படாத கோதுமை ரொட்டியையும், சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பையும் வைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயைத் துழாவுவதை நான் கண்டேன். அன்றிலிருந்து சுரைக்காயை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டே இருக்கிறேன். (மற்றோர் அறிவிப்பில்) ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறியுள்ளார்கள்: அனஸ் (ரலி) அவர்கள், ‘‘நான் சுரைக்காயை ஒன்றுசேர்த்து நபி (ஸல்) அவர்கள்முன் வைத்தேன்” என்று கூறினார்கள்.60 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5439
- Book Index
- 67
Grades
- -