ஹதீஸ்கள்
#5432
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (‘நபிமொழிகளை அதிகமாக அபூஹுரைரா அறிவிக்கிறாரே’ என்று மக்கள் -என்னைப் பற்றிக் குறை- கூறிக்கொண்டிருந்தார்கள்.) நான் என் வயிறு நிரம்பினால் போதும் என்று நபி (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். அந்தக் காலகட்டத்தில் புளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; (மெல்லிய) பட்டாடையை நான் அணிவதுமில்லை; இன்னவரோ இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. (பசியின் காரணத்தால்) நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக்கொண்டிருந்தேன். என்னை ஒரு மனிதர் (தமது இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக (‘எனக்கு விருந்தளியுங் கள்’ என்ற பொருள் கொண்ட ‘அக்ரினீ’ எனும் சொல்லைச் சற்று மாற்றி) ‘அக்ரிஃனீ’ (எனக்கு ஓர் இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்) என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும். மக்களிலேயே ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்தான் ஏழைகளுக்கு அதிகமாக உதவி செய்பவர் ஆவார். அவர் எங்களை அழைத்துச் சென்று தமது வீட்டிலிருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவுக்கென்றால் அவர் எதுவுமில்லாத நெய் (அல்லது தேன்) பையை எங்களிடம் கொண்டுவருவார். அதை நாங்கள் பிளந்து அதில் (ஒட்டிக்கொண்டு) இருப்பதை நாக்கால் வழித்து உண்போம்.53 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5432
- Book Index
- 60
Grades
- -