ஹதீஸ்கள்
#5430
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை பெற்ற) பரீரா (ரலி) அவர்களின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைத்தன: 1. (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள் அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்போது பரீராவின் உரிமையாளர்கள், ‘‘அவளுடைய வாரிசுரிமை (‘வலா’) எங்களுக்கு உரிய தாகவே இருக்கும்” என்று சொன்னார்கள். அதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டபோது அவர்கள், ‘‘நீ விரும்பினால், பரீராவின் வாரிசுரிமை உனக்கேயுரியது என்று அவர்களுக்கு நீ நிபந்தனையிடலாம். ஏனெனில், வாரிசுரிமை (அவ்வடிமையை) விடுதலை செய்தவருக்கே கிடைக்கும்” என்று சொன்னார்கள். 2. அவ்வாறே அவர் விடுதலை செய்யப்பட்டபோது அவர் தம் (அடிமைக்) கணவருடன் அவரது மணபந்தத்தில் நீடிக்கவும் செய்யலாம்; அல்லது கணவரைப் பிரிந்துவிடவும் செய்யலாம் என (இரண்டில் விரும்பியதைச் செய்துகொள்ள) விருப்ப உரிமை அளிக்கப்பட்டார். 3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போது அடுப்பில் பாத்திரம் ஒன்று கொதித்துக்கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் காலை உணவைக் கொண்டு வரும்படி பணித்தார்கள். உடனே அவர்களுக்கு ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ‘‘இறைச்சி (சமைக்கப்படும் காட்சி)யை நான் பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு வீட்டார், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதரே! ஆனால், அது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்ட இறைச்சியாகும். அதை அவர் நமக்கு அன்பளிப்பாகத் தந்தார்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அது அவருக்குத் தர்மமாகும். நமக்கு அன்பளிப்பாகும்” என்று கூறினார்கள்.52 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5430
- Book Index
- 58
Grades
- -