ஹதீஸ்கள்
#5426
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்களிடம் (இராக்கில் உள்ள ‘தைஃபூன்’ நகரில்) இருந்தோம். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். அக்னிஆராதனை செய்பவர் (மஜூசீ) ஒருவர் (வெள்ளிப் பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். கோப்பையை அவர்களின் கையில் அவர் வைத்தபோது அதை அவர்கள் அவர்மீது வீசியெறிந் தார்கள். பிறகு ‘‘நான் பலமுறை இவரை (வாய்மொழியால்) தடுத்திராதிருந்தால்...” என்று சொன்னார்கள். (அதாவது ‘‘பல தடவை வாய்மொழியால் தடுத்தபோது அவர் இணங்கியிருந்தால்) நான் இவ்வாறு (வீசியெறியும் செயலைச்) செய்திருக்க மாட்டேன்” என அவர்கள் சொல்வதைப் போன்றுள்ளது. ஆயினும், (நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்றால்,) நபி (ஸல்) அவர்கள் ‘‘சாதாரண பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியவையாகும்” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا سيف بن ابي سليمان، قال سمعت مجاهدا، يقول حدثني عبد الرحمن بن ابي ليلى، انهم كانوا عند حذيفة فاستسقى فسقاه مجوسي. فلما وضع القدح في يده رماه به وقال لولا اني نهيته غير مرة ولا مرتين. كانه يقول لم افعل هذا، ولكني سمعت النبي صلى الله عليه وسلم يقول " لا تلبسوا الحرير ولا الديباج ولا تشربوا في انية الذهب والفضة، ولا تاكلوا في صحافها، فانها لهم في الدنيا ولنا في الاخرة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5426
- Book Index
- 54
Grades
- -
