ஹதீஸ்கள்
#5424
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (ஹஜ்ஜின்போது அறுக்கப்படும்) குர்பானிப் பிராணிகளின் இறைச்சிகளை (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு(ச் செல்லும்போது) பயண உணவாக எடுத்துச் செல்வோம்.45 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்னு ஜுரைஜ் (அப்துல் மக் பின் அப்தில் அஸீஸ்-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான், அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘ஜாபிர் (ரலி) அவர்கள் ‘மதீனாவுக்கு நாங்கள் வந்து சேரும்வரை’ எனும் வாக்கியத்தையும் சேர்த்து அறிவித்தார்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد، حدثنا سفيان، عن عمرو، عن عطاء، عن جابر، قال كنا نتزود لحوم الهدى على عهد النبي صلى الله عليه وسلم الى المدينة. تابعه محمد عن ابن عيينة. وقال ابن جريج قلت لعطاء اقال حتى جينا المدينة قال لا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5424
- Book Index
- 52
Grades
- -
