ஹதீஸ்கள்
#5403
ஸஹீஹ் அல்-புகாரீ - Food, Meals
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துவந்தோம். எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் தண்டுக் கீரையின் தண்டுகளை எடுத்து தனது பாத்திரமொன்றில் அவற்றையிட்டு அதில் தொலி நீக்கப்படாத கோதுமை தானியங்கள் சிறிதைப் போட்டு(க் கடைந்து) வைப்பார். நாங்கள் (வெள்ளிக்கிழமைத் தொழுகை) தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர் அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம் மகிழ்ச்சியடைந்துவந்தோம். நாங்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக் குப் பின்புதான் காலைச் சிற்றுண்டி அருந்துவோம்; மதிய ஓய்வெடுப்போம். அல்லாஹ்வின் மீதாணையாக! (அவர் பரிமாறிய) அந்த உணவில் கெட்டியான கொழுப்போ திரவக் கொழுப்போ எதுவும் இருந்ததில்லை.28 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا يعقوب بن عبد الرحمن، عن ابي حازم، عن سهل بن سعد، قال ان كنا لنفرح بيوم الجمعة، كانت لنا عجوز تاخذ اصول السلق، فتجعله في قدر لها، فتجعل فيه حبات من شعير، اذا صلينا زرناها فقربته الينا، وكنا نفرح بيوم الجمعة من اجل ذلك، وما كنا نتغدى ولا نقيل الا بعد الجمعة، والله ما فيه شحم ولا ودك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Food, Meals
- Hadith Index
- #5403
- Book Index
- 31
Grades
- -
