ஹதீஸ்கள்
#5372
ஸஹீஹ் அல்-புகாரீ - Supporting the Family
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை) ‘‘அல்லாஹ்வின் தூதரே! அபூசுஃப்யானின் புதல்வியான என் சகோதரியைத் தாங்கள் மணந்து கொள்ளுங்கள்” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீயே விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று” என்றார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அபூசலமாவின் மகள் ‘துர்ரா’வை மணந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘(அதாவது என் துணைவியார்) உம்மு சலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?” என்று கேட்க, நான் ‘‘ஆம்” என்று சொன்னேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் (உம்மு சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடி சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூசலமாவிற்கும் ‘ஸுவைபா’ (எனும் அடிமைப் பெண்) பாலூட்டி யிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்!” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண் ஆவார்.) ஸுவைபாவை அபூலஹப் விடுதலை செய்திருந்தார்.28 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Supporting the Family
- Hadith Index
- #5372
- Book Index
- 22
Grades
- -