ஹதீஸ்கள்
#5357
ஸஹீஹ் அல்-புகாரீ - Supporting the Family
மஅமர் பின் ராஷித் (ரஹ்)அவர்கள் கூறியதாவது: சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘தம் குடும்பத்தாருக்காக ஓர் ஆண்டுக்கான, அல்லது ஆண்டின் ஒரு பகுதிக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவரைப் பற்றி நீங்கள் (ஏதேனும் ஹதீஸ்) கேள்விப்பட்டி ருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘‘(அப்படியொரு ஹதீஸ்) எனக்கு நினைவில்லை” என்று சொன்னேன். பிறகு, உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் என் நினைவில் வந்தது: நபி (ஸல்) அவர்கள் பனுந்நளீர் குலத்தாரின் பேரீச்சந் தோட்டத்தை விற்றுத் தம் குடும்பத்தாருக்கு, அவர் களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்துவைப்பவர்களாக இருந்தார்கள்.9 அத்தியாயம் :
حدثني محمد بن سلام، اخبرنا وكيع، عن ابن عيينة، قال قال لي معمر قال لي الثوري هل سمعت في الرجل يجمع لاهله قوت سنتهم او بعض السنة قال معمر فلم يحضرني، ثم ذكرت حديثا حدثناه ابن شهاب الزهري عن مالك بن اوس عن عمر رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم كان يبيع نخل بني النضير، ويحبس لاهله قوت سنتهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Supporting the Family
- Hadith Index
- #5357
- Book Index
- 7
Grades
- -
