ஹதீஸ்கள்
#5355
ஸஹீஹ் அல்-புகாரீ - Supporting the Family
அபூஸாலிஹ் தக்வான்அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஒருவர் தமக்குத் தேவையானது போக மீதியை) தன்னிறை வான நிலையில் செய்யும் தர்மமே சிறந்த தர்மமாகும். மேலேயுள்ள (கொடுக்கும்) கைதான், தாழ்ந்துள்ள (வாங்கும்) கையைவிடச் சிறந்ததாகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன் தர்மத்தை) நீ தொடங்கு!” என்று சென்னார்கள்7 என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிவிட்டு, (கணவரிடம்) மனைவி, ‘‘எனக்கு உணவளி, அல்லது என்னை மணவிலக்குச் செய்துவிடு” என்று கூறுகிறாள். அடிமை (தன் எசமானிடம்), ‘‘எனக்கு உணவளி. என்னிடம் நீ வேலை வாங்கிக்கொள்!” என்று கூறுகின்றான். மகன் (தன் தந்தையிடம்), ‘‘எனக்கு உணவளியுங்கள். (உங்களை விட்டால் வேறு) யார்தான் எனக்குப் பொறுப்பு?” என்று கூறுகின்றான் எனக் கூறினார்கள். மக்கள், ‘‘அபூஹுரைரா அவர்களே! இதையுமா நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘இல்லை; இது அபூஹுரைராவின்(எனது) விளக்கமாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Supporting the Family
- Hadith Index
- #5355
- Book Index
- 5
Grades
- -