ஹதீஸ்கள்
#5350
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்” என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), ‘‘இனி அவள்மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என்று சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) எனது பொருள் (என்னாவது)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவள்மீது உண்மை(யான குற்றச் சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளது கற்பை நீர் பயன்படுத்திக்கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவள்மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அப்பொருள் அவளிடமிருந்து உனக்கு வெகுதொலைவில் உள்ளது” என்று சொன்னார்கள்.107 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5350
- Book Index
- 95
Grades
- -