ஹதீஸ்கள்
#5345
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: தம் தந்தை (அபூசுஃப்யான்-ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது (அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் நறுமணத்தைக் கொண்டுவரச் சொல்லி அதை தம் இரு கைகளிலும் தடவிக் கொண்டார்கள். மேலும், (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர” என்று சொல்லக் கேட்டுள்ளேன்.100 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، عن سفيان، عن عبد الله بن ابي بكر بن عمرو بن حزم، حدثني حميد بن نافع، عن زينب ابنة ام سلمة، عن ام حبيبة ابنة ابي سفيان، لما جاءها نعي ابيها دعت بطيب، فمسحت ذراعيها وقالت ما لي بالطيب من حاجة. لولا اني سمعت النبي صلى الله عليه وسلم يقول " لا يحل لامراة تومن بالله واليوم الاخر تحد على ميت فوق ثلاث، الا على زوج اربعة اشهر وعشرا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5345
- Book Index
- 90
Grades
- -
