ஹதீஸ்கள்
#5343
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கணவன் இறந்து இத்தாவிலிருக்கும் பெண்) நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஆனால், (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடையும் சமயத்தில் தவிர! அப்போது ‘குஸ்த்’ மற்றும் ‘ழஃபார்’ ஆகிய கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்ளலாம். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘குஸ்த்’ (கோஷ்டம்) எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறைகளிலும் ஆளப்படுகிறது. ‘காஃபூர்’ (கற்பூரம்) எனும் சொல் (ஃகாஃபூர், காஃபூர்) என இரு முறைகளிலும் ஆளப்படுவதைப்போல.98 அத்தியாயம் :
وقال الانصاري حدثنا هشام، حدثتنا حفصة، حدثتني ام عطية، نهى النبي صلى الله عليه وسلم " ولا تمس طيبا الا ادنى طهرها اذا طهرت، نبذة من قسط واظفار ". قال ابو عبد الله القسط والكست مثل الكافور والقافور
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5343
- Book Index
- 88
Grades
- -
