ஹதீஸ்கள்
#5329
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பியபோது ஸஃபிய்யா (ரலி) அவர்கள் (மாதவிடாய் ஏற்பட்டதால்) தமது கூடாரத்தின் வாசலில் கவலை அடைந்தவராய் நின்றுகொண்டிருந் தார்கள். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் (செல்லமாக) ‘‘அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! உனக்குத் தொண்டை வலி வரட்டும்! எம்மை (புறப் படவிடாமல்) தடுத்துவிட்டாயே! நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா பத்தாவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தாயா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று கூற, நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்படியானால், நீ புறப்படு” என்று கூறினார்கள்.87 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن الحكم، عن ابراهيم، عن الاسود، عن عايشة رضى الله عنها قالت لما اراد رسول الله صلى الله عليه وسلم ان ينفر اذا صفية على باب خبايها كييبة، فقال لها " عقرى او حلقى انك لحابستنا اكنت افضت يوم النحر ". قالت نعم. قال " فانفري اذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5329
- Book Index
- 74
Grades
- -
