ஹதீஸ்கள்
#5299
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (செலவே செய்யாத) கஞ்சன், செலவு செய்கின்ற (தாராள மனம் படைத்த)வன் ஆகிய இருவரின் நிலையானது, இரு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவ்விருவரும் தமது மார்பிலிருந்து கழுத்தெலும்புவரை இரும்பாலான நீளங்கி அணிந்துள்ளனர். செலவு செய்கின்றவர் எதைச் செலவு செய்தாலும் அவரது அங்கி உடல்மீது நீண்டுகொண்டே சென்று விரல்நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரது பாதச்சுவடுகளைக்கூட(த்தொட்டு) அழித்துவிடுகிறது. கஞ்சன் (எதையாவது) செலவு செய்ய விரும்பினால் (அவனது இரும்பு அங்கியின்) ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்கிறது. அவன் அதை(த் தளர்த்தி) விரிவாக்க முயல்கிறான். ஆனால், அது விரிவடைவதில்லை. (இதைக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் (குரல்வளையைக் கழுத்துச் சட்டை இறுக்கிப் பிடிப்பதை உணர்த்தும் முகமாக) தமது விரலால் தமது குரல்வளையைக் காட்டி சைகை செய்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.67 அத்தியாயம் :
وقال الليث حدثني جعفر بن ربيعة، عن عبد الرحمن بن هرمز، سمعت ابا هريرة، قال رسول الله صلى الله عليه وسلم " مثل البخيل والمنفق كمثل رجلين عليهما جبتان من حديد، من لدن ثدييهما الى تراقيهما، فاما المنفق فلا ينفق شييا الا مادت على جلده حتى تجن بنانه وتعفو اثره، واما البخيل فلا يريد ينفق الا لزمت كل حلقة موضعها، فهو يوسعها فلا تتسع ". ويشير باصبعه الى حلقه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5299
- Book Index
- 48
Grades
- -
