ஹதீஸ்கள்
#5298
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து ‘பிலாலின் அழைப்பு’ அல்லது ‘பிலாலின் (தொழுகை) அறிவிப்பு’ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் ‘அவர் அழைப்பது’ அல்லது ‘அவர் (தொழுகை) அறிவிப்புச் செய்வது’, உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகத்தான்; ‘சுப்ஹ்’ அல்லது ‘ஃபஜ்ர்’ நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல. இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது தம் கைகளை வெளிப்படுத்தினார்கள். பிறகு ஒரு கையைவிட இன்னொரு கையை (நீளவாட்டில்) நீட்டிக்காட்டி (‘நீளவாட்டில் தோன்றும் அதிகாலை வெளிச்சமே உண்மையான ஃபஜ்ர் நேரம் ஆகும்; அகலவாட்டில் தோன்றுவதன்று’ என்பதுபோல்) சைகை செய்தார்கள்.66 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا يزيد بن زريع، عن سليمان التيمي، عن ابي عثمان، عن عبد الله بن مسعود رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " لا يمنعن احدا منكم نداء بلال او قال اذانه من سحوره، فانما ينادي او قال يوذن ليرجع قايمكم ". وليس ان يقول كانه يعني الصبح او الفجر، واظهر يزيد يديه ثم مد احداهما من الاخرى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5298
- Book Index
- 47
Grades
- -
