ஹதீஸ்கள்
#5297
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மக்கா வெற்றியின்) பயணத்தில் இருந்துகொண்டிருந்தோம். (அப்போது அவர்கள் ரமளான் நோன்பு நோற்றி ருந்தார்கள்.) சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று எனக்காக மாவு கரைப்பீராக!” என்று சொன்னார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!” என்று (மீண்டும்) சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக் கிறதே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!” என்று சொன்னார்கள். மூன்றாம் தடவையில் அவர் இறங்கிவந்து நபி (ஸல்) அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்தி (நோன்பு துறந்து)விட்டுத் தமது கையால் கிழக்கு நோக்கி சைகை செய்தவாறு, ‘‘நீங்கள் (கிழக்குத் திசையான) இங்கிருந்து இரவு முன்னோக்கி வந்து விடக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்திட வேண்டும்” என்று சொன்னார்கள்.65 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5297
- Book Index
- 46
Grades
- -