ஹதீஸ்கள்
#5295
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்களில் ஒருவன் ஒரு சிறுமியின் (கழுத்தில் கிடந்த) வெள்ளிக் காசு மாலையைப் பறித்துக்கொண்டு அவளது மண்டையை உடைத்துவிட்டான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அவளை உடனே அவளுடைய குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அவளால் பேச முடியவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘உன்னைத் தாக்கியவன் யார்? இவனா?” என்று அவளைத் தாக்காத வேறொருவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டார்கள். அதற்கு அச்சிறுமி, ‘‘இல்லை” என்று தனது தலையால் சைகை செய்தாள். பிறகு அவளைத் தாக்காத இன்னொரு வரின் பெயரைக் குறிப்பிட்டு (இவரா உன்னைத் தாக்கியவர்? என்று) கேட்டார் கள். அதற்கும் அவள், ‘‘இல்லை” என்று சைகை செய்தாள். இறுதியில் ‘‘இன்னாரா?” என்று அவளைத் தாக்கியவனின் பெயரைச் சொல்லிக் கேட்டதும் அவள், ‘‘ஆம்” என்று சைகை செய்தாள். உடனே அந்த நபருக்குத் தண்டனை வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவனுடைய தலை இரு கற்களுக்கிடையில் வைத்து நசுக்கப் பட்டது.63 அத்தியாயம் :
وقال الاويسي حدثنا ابراهيم بن سعد، عن شعبة بن الحجاج، عن هشام بن زيد، عن انس بن مالك، قال عدا يهودي في عهد رسول الله صلى الله عليه وسلم على جارية، فاخذ اوضاحا كانت عليها ورضخ راسها، فاتى بها اهلها رسول الله صلى الله عليه وسلم وهى في اخر رمق، وقد اصمتت، فقال لها رسول الله صلى الله عليه وسلم " من قتلك فلان ". لغير الذي قتلها، فاشارت براسها ان لا، قال فقال لرجل اخر غير الذي قتلها، فاشارت ان لا، فقال " ففلان ". لقاتلها فاشارت ان نعم، فامر به رسول الله صلى الله عليه وسلم فرضخ راسه بين حجرين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5295
- Book Index
- 44
Grades
- -
