ஹதீஸ்கள்
#5294
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினாலும், அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. இதைக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் தம் விரல்நுனிகளை நடுவிரல் மற்றும் மோதிர விரலின் அடிப் பாகத்தின் மீது வைத்துத் தமது கையால் சைகை செய்தார்கள். ‘‘(இதன் மூலம்) அது குறைந்த நேரம் என்பதை நபியவர்கள் உணர்த்துகிறார்கள்” என நாங்கள் பேசிக் கொண்டோம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.62 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا بشر بن المفضل، حدثنا سلمة بن علقمة، عن محمد بن سيرين، عن ابي هريرة، قال قال ابو القاسم صلى الله عليه وسلم " في الجمعة ساعة لا يوافقها مسلم قايم يصلي، فسال الله خيرا، الا اعطاه ". وقال بيده، ووضع انملته على بطن الوسطى والخنصر. قلنا يزهدها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5294
- Book Index
- 43
Grades
- -
