ஹதீஸ்கள்
#5258
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘‘ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். (அது குறித்து மார்க்கம் என்ன தீர்ப்புச் செய்கிறது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இப்னு உமர் (அதாவது நான்) யார் என்று உங்களுக்குத் தெரியும். நான் மாதவிடாய்ப் பருவத்திலிருந்த என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துத் தெரிவித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு அவளை மணவிலக்குச் செய்ய விரும்பினால் அவளை அவர் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்’ என உத்தரவிடுங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் கூறுகிறார்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘(மனைவி மாதவிடாயிலிருந்தபோது தாங்கள் அளித்த மணவிலக்கை) நபி (ஸல்) அவர்கள் ‘தலாக்’ என்றே கருதினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?” என்று கேட்டார்கள்.6 அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا همام بن يحيى، عن قتادة، عن ابي غلاب، يونس بن جبير قال قلت لابن عمر رجل طلق امراته وهى حايض. فقال تعرف ابن عمر ان ابن عمر طلق امراته وهى حايض فاتى عمر النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فامره ان يراجعها فاذا طهرت فاراد ان يطلقها فليطلقها، قلت فهل عد ذلك طلاقا قال ارايت ان عجز واستحمق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5258
- Book Index
- 8
Grades
- -
