ஹதீஸ்கள்
#5255
ஸஹீஹ் அல்-புகாரீ - Divorce
அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதன் அருகில் இருந்த வேறு) இரு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்துவரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத் திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப் பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் பின் ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிóத்தாயும் இருந்தார். (அப்பெண்ணுக் கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி (ஸல்) அவர்கள் நுழைந்து ‘‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!” என்று கூறினார்கள். அந்தப் பெண் ‘‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?” என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அவர்மீது வைக்கப்போனார்கள். உடனே அவர் ‘‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘‘கண்ணியமான (இறை)வனிடம்தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘‘அபூஉசைதே! இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய் விட்டுவிடு” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divorce
- Hadith Index
- #5255
- Book Index
- 5
Grades
- -