ஹதீஸ்கள்
#5217
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘‘நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?” என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கிக்கொள்ளலாம் என அவர்களுக்கு அனுமதியளித்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை எனது வீட்டிலேயே தங்கியிருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கிவந்தார்களோ அந்த நாளில்தான் என் வீட்டில் வைத்து இறந்தார்கள். எனது நெஞ்சுக்கும் நுரையீரலுள்ள பகுதிக்கும் இடையே அவர்களது தலை இருந்தபோது, (மிஸ்வாக் குச்சியை என் வாயால் கடித்து மென்மைப்படுத்திக் கொடுத்திருந்ததால்) அவர்களின் உமிழ்நீர் என் உமிழ்நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக்கொண்டான்.148 அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني سليمان بن بلال، قال هشام بن عروة اخبرني ابي، عن عايشة رضى الله عنها ان رسول الله صلى الله عليه وسلم كان يسال في مرضه الذي مات فيه " اين انا غدا اين انا غدا ". يريد يوم عايشة، فاذن له ازواجه يكون حيث شاء، فكان في بيت عايشة حتى مات عندها. قالت عايشة فمات في اليوم الذي كان يدور على فيه في بيتي، فقبضه الله، وان راسه لبين نحري وسحري، وخالط ريقه ريقي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5217
- Book Index
- 150
Grades
- -
