ஹதீஸ்கள்
#5205
ஸஹீஹ் அல்-புகாரீ - Wedlock, Marriage
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவருடைய மகளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்துத் தெரிவித்துவிட்டு, ‘‘தம் மகளின் கணவர், அவளது தலையில் ஒட்டுமுடி வைத்துவிடுமாறு என்னைப் பணிக்கிறார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்! (ஒட்டுமுடி வைத்துவிடாதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا خلاد بن يحيى، حدثنا ابراهيم بن نافع، عن الحسن هو ابن مسلم عن صفية، عن عايشة، ان امراة، من الانصار زوجت ابنتها فتمعط شعر راسها، فجاءت الى النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له، فقالت ان زوجها امرني ان اصل في شعرها. فقال " لا انه قد لعن الموصلات
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Wedlock, Marriage
- Hadith Index
- #5205
- Book Index
- 139
Grades
- -
